என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்1,500 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை
Byமாலை மலர்17 Oct 2020 9:48 AM GMT (Updated: 17 Oct 2020 9:48 AM GMT)
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 1,500 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
நகரங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து நகரங்களின் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 12-ந்தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் நகரை பொறுத்தவரை சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 1,500 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அதில் சளி, காய்ச்சல், இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அப்போது சளி, காய்ச்சல், இருமல் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X