search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தோகைமலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் மீது வழக்கு

    தோகைமலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தோகைமலை:

    தோகைமலை கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், தோகைமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். 

    அப்போது, தோகைமலை தெற்கு சேனியா தெருவை சேர்ந்த சேகர் (வயது 47), நெசவாளர் காலனியை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×