என் மலர்
நீங்கள் தேடியது "Case against 2 people"
- பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது.
- உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு இளைஞர்கள் மற்றும் அப்பகுதி ஆண்களுக்கு தினமும் மது அருந்த அனுமதி அளிப்பதாகவும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பிறந்தநாள், பல்வேறு விழாக்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடுவதற்கும், கும்பலாக மது அருந்துவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார், உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்த உணவகத்தின் உரிமையா–ளர்களான சகோதரர்கள் செந்தில், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உரிய அனுமதி பெறாமல் உணவ–கத்தில் மது அருந்த அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில், சிவா ஆகிய இருவர் மீதும் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இது போன்று சட்ட விரோதமாக உணவ–கங்கள், தாபாக்கள், ரெஸ்டா–ரண்டில் அனுமதி இன்றி மது விற்பது, மது அருந்த அனுமதி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்தியூர் அடுத்த பர்கூர் கொங்காடை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த தாசன் மகன் முருகன் என்ற சின்னமுத்து என்பவர் கஞ்சா செடி வளர்ப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:
தென்காசி மாவட்டம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 42). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
விற்பனைக் கூடத்தில் கடந்த 2-ந் தேதி படிக்கற்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ராஜலிங்கத்துக்கும், அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற சுரேஷ், ஞாறான்விளை சேர்ந்த மணி ஆகியோருக்கும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜலிங்கம் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் செல்லக்குட்டி என்ற சுரேஷ் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






