search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who grew cannabis"

    • முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்தியூர் அடுத்த பர்கூர் கொங்காடை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த தாசன் மகன் முருகன் என்ற சின்னமுத்து என்பவர் கஞ்சா செடி வளர்ப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×