என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.41 லட்சம் மோசடி- நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
Byமாலை மலர்15 Oct 2020 9:13 AM GMT (Updated: 15 Oct 2020 9:13 AM GMT)
ரூ.41 லட்சம் மோசடி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
கோவை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜோதி என்ற பெயரில் குணசேகரன் (வயது 45), அய்யாவு (40) ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள், பொதுமக்கள் செய்யும் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறினர். அதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி அதிக வட்டி தரவில்லை.
இது குறித்து ஈரோடு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் முதலீட்டாளர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 16 பேரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே நிதி நிறுவன உரிமையாளர்கள் குணசேகரன், அய்யாவு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குணசேகரன், அய்யாவு ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜோதி என்ற பெயரில் குணசேகரன் (வயது 45), அய்யாவு (40) ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள், பொதுமக்கள் செய்யும் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறினர். அதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி அதிக வட்டி தரவில்லை.
இது குறித்து ஈரோடு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் முதலீட்டாளர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 16 பேரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே நிதி நிறுவன உரிமையாளர்கள் குணசேகரன், அய்யாவு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குணசேகரன், அய்யாவு ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X