search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    நிலக்கோட்டை அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நிலக்கோட்டையில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கோகுல்நாத் தலைமை தாங்கி பேசினார். இதில் மத்திய அரசை கண்டித்தும், பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் வலியுறுத்தி பேசினர். 

    போராட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா, அகில இந்திய உறுப்பினர் ரசூல் முகைதீன், நகர தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை தாக்கிய போலீசாரை கண்டித்தும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

    Next Story
    ×