என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகள் உருவாகும் - கனிமொழி எம்.பி. பேட்டி
Byமாலை மலர்4 Oct 2020 10:06 PM GMT (Updated: 4 Oct 2020 10:06 PM GMT)
இந்தியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகள் உருவாகும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தொடர்ந்து மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு புரியாத மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய சூழலை கட்டாயமாக்குகிறது. இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலையும், தொடர்பையும் பெற முடியவில்லை. கடிதங்கள்கூட இந்தியில்தான் அனுப்பக்கூடிய சூழல் மத்திய அரசிடம் இருக்கிறது.
மக்களிடம் எல்லா வகையிலும் இந்தியை திணிக்கும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி கொண்டு இருக்கிறது. மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ரெயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் வரும் குறுந்தகவலை கூட மக்களால் படிக்க முடியாது. குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதையே தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்காமல் சம்பவத்தை மூடி மறைக்கத்தான் அரசு முயல்கிறது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X