என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவருடன் தகராறு: மகன் பிறந்த நாளில் தாய் தற்கொலை
Byமாலை மலர்4 Oct 2020 12:45 AM GMT (Updated: 4 Oct 2020 12:45 AM GMT)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகன் பிறந்த நாளில் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னங்குறிச்சி:
சேலம் ஜட்ஜ் ரோடு அருகில் உள்ள எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கவுரி (வயது 40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் தங்களது மகனின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினார்கள். அதன் பின்னர் இரவு உணவிற்காக ஓட்டலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுரி, தனிஅறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் பிறந்த நாளில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X