search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    தென்காசி அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

    தென்காசி அருகே இன்று காலை மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சாம்பவர் வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள கள்ளம்புளி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 30). இவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் சுமார் 50 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த டவரின் மீது ஏறிய அருணாச்சலம் திடீரென்று கீழே குதித்துவிடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதியினர் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அருணாச்சலத்தை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    Next Story
    ×