என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் வங்கி - பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்29 Sep 2020 10:08 AM GMT (Updated: 29 Sep 2020 10:08 AM GMT)
நாகர்கோவிலில் வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் அந்த வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தினர். பின்னர் அந்த வங்கி மூடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியருடன் பணியாற்றிய 15 பேருக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று அந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மூடினர். பின்னர் அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் அந்த வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தினர். பின்னர் அந்த வங்கி மூடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியருடன் பணியாற்றிய 15 பேருக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று அந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மூடினர். பின்னர் அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X