search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கதிரேசன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×