search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உசிலம்பட்டி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை

    உசிலம்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 28). வெளிமாநிலத்தில் முறுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இவரது மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது.

    கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவனை பிரிந்து லட்சுமி குழந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த சூழ்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு எடுத்தார். தனக்கு பிறகு குழந்தை அனாதையாகி விடுமே என்று கருதிய லட்சுமி, குழந்தையை கொன்று விட முடிவு செய்தார்.

    அதன்படி இரவில் மனதை கல்லாக்கி கொண்டு 6 மாத பெண் குழந்தைக்கு வி‌ஷத்தை கொடுத்தார். அதன் பிறகு தானும் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர்.

    தாயும், குழந்தையும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் வாலாந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×