என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்21 Sep 2020 10:15 AM GMT (Updated: 21 Sep 2020 10:15 AM GMT)
வத்தலக்குண்டு அருகே தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் மீது, கடந்த 14-ந்தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேலக்கோவில்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜன் (வயது 25) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜனின் உறவினர் திருமணம் தேவாலயத்தில் நடந்தது. அப்போது ஒலிப்பெருக்கி வைப்பதற்கு தேவாலய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தேவாலயத்தின் மீது நாகராஜன் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X