என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் தே.மு.தி.க. வார்டு உறுப்பினர் விபத்தில் பலி
Byமாலை மலர்19 Sep 2020 8:00 AM GMT (Updated: 19 Sep 2020 8:00 AM GMT)
கும்மிடிப்பூண்டியில் தே.மு.தி.க. வார்டு உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் ஏழுமலை(வயது 38). மேலும் இவர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். ஏழுமலையின் வீடு பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தனது மாமியார் கிருஷ்ணவேணி (67) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வழுதிலம்பேடு கிராமத்தில் இருந்து சோழியம்பாக்கம் கிராமம் நோக்கி ஏழுமலை சென்று கொண்டிருந்தார்.
சோழியம்பாக்கம் அருகே செல்லும் போது புதிதாக போடப்பட்ட சாலையோர மேட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி வார்டு உறுப்பினர் ஏழுமலை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ஏழுமலைக்கு கவுரி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் ஏழுமலை(வயது 38). மேலும் இவர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். ஏழுமலையின் வீடு பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தனது மாமியார் கிருஷ்ணவேணி (67) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வழுதிலம்பேடு கிராமத்தில் இருந்து சோழியம்பாக்கம் கிராமம் நோக்கி ஏழுமலை சென்று கொண்டிருந்தார்.
சோழியம்பாக்கம் அருகே செல்லும் போது புதிதாக போடப்பட்ட சாலையோர மேட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி வார்டு உறுப்பினர் ஏழுமலை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ஏழுமலைக்கு கவுரி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X