search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான தேமுதிக வார்டு உறுப்பினர்
    X
    விபத்தில் பலியான தேமுதிக வார்டு உறுப்பினர்

    கும்மிடிப்பூண்டியில் தே.மு.தி.க. வார்டு உறுப்பினர் விபத்தில் பலி

    கும்மிடிப்பூண்டியில் தே.மு.தி.க. வார்டு உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் ஏழுமலை(வயது 38). மேலும் இவர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். ஏழுமலையின் வீடு பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தனது மாமியார் கிருஷ்ணவேணி (67) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வழுதிலம்பேடு கிராமத்தில் இருந்து சோழியம்பாக்கம் கிராமம் நோக்கி ஏழுமலை சென்று கொண்டிருந்தார்.

    சோழியம்பாக்கம் அருகே செல்லும் போது புதிதாக போடப்பட்ட சாலையோர மேட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி வார்டு உறுப்பினர் ஏழுமலை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ஏழுமலைக்கு கவுரி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×