search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    முதலிபாளையம், நல்லூரில் 22-ந்தேதி மின்தடை

    முதலிபாளையம், நல்லூரில் வருகிற 22-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 22-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம்,ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர்.வி.இ.நகர். கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம்,பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம்,ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தாம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சானார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×