search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    குன்னம் அருகே டிராக்டர் மோதி பெண் பலி

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே டிராக்டர் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 30). இவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவர் திம்மூர் கழிவு குட்டையில் வேலை பார்த்து வந்தார். அந்த குட்டையில் டிராக்டர் மூலம் மண் அள்ளினர். 

    அப்போது, டிராக்டரின் பின் பக்கம் ஜெயலட்சுமி நின்று கொண்டிருந்தார். இதனை கவனிக்காமல் டிரைவர் டிராக்டரை பின்பக்கமாக இயக்கினார். இதில் டிராக்டர் மோதியதில் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமியை அரியலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜெயலட்சுமி இறந்தது தெரியவந்தது. 

    இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சரவணனை (27) கைது செய்தார். இறந்த ஜெயலட்சுமிக்கு அபிஷேக் (11) , அதிபன் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
    Next Story
    ×