search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம்

    வலங்கைமான் அருகே முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    வலங்கைமான்:

    வலங்கைமான் கடைத்தெரு பகுதியில் வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப்போல விருப்பாட்சிபுரம் கடைத்தெரு பகுதியில் ஒன்றிய திட்ட ஆணையர் சிவக்குமார் தலைமையில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கோபு உள்ளிட்ட அதிகாரிகள் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×