என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது
Byமாலை மலர்15 Sep 2020 8:41 AM GMT (Updated: 15 Sep 2020 1:19 PM GMT)
சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கின. கடந்த வாரம் 100 விமானங்களாக அதிகரித்தன. இன்று மேலும் அதிகரித்து 126 விமானங்களாகி உள்ளன.
சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
2 மாதங்கள் இடைவெளிக்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மீண்டும் மிகவும் குறைந்த அளவு உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின.
ஆனாலும் சென்னையில் அதிகரித்துவந்த கொரோனா வைரஸ் தாக்கம், இ-பாஸ் கெடுபிடிகள் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. அதைப்போல் விமான சேவைகளும் குறைவாக இருந்தன.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள், மாநிலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, மாநிலங்கள் இடையேயும் தாராள இ-பாஸ் போன்றவைகளுக்கு மத்தியில் சென்னை நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கின. கடந்த வாரம் 100 விமானங்களாக அதிகரித்தன. இன்று மேலும் அதிகரித்து 126 விமானங்களாகி உள்ளன.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் 63 விமானங்கள், சென்னைக்கு வரும் 63 விமானங்கள் என 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதில் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், சென்னைக்கு வரும் விமானங்களில் 7,500 பேரும், மொத்தம் 12,500 பேர் பயணிக்கின்றனர்.
கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், புவனேஸ்வர், பாட்னா போன்ற விமானங்களில் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். சென்னையிலிருந்து கோவை வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானத்தையும் இயக்குகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
2 மாதங்கள் இடைவெளிக்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மீண்டும் மிகவும் குறைந்த அளவு உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின.
ஆனாலும் சென்னையில் அதிகரித்துவந்த கொரோனா வைரஸ் தாக்கம், இ-பாஸ் கெடுபிடிகள் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. அதைப்போல் விமான சேவைகளும் குறைவாக இருந்தன.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள், மாநிலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, மாநிலங்கள் இடையேயும் தாராள இ-பாஸ் போன்றவைகளுக்கு மத்தியில் சென்னை நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கின. கடந்த வாரம் 100 விமானங்களாக அதிகரித்தன. இன்று மேலும் அதிகரித்து 126 விமானங்களாகி உள்ளன.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் 63 விமானங்கள், சென்னைக்கு வரும் 63 விமானங்கள் என 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதில் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், சென்னைக்கு வரும் விமானங்களில் 7,500 பேரும், மொத்தம் 12,500 பேர் பயணிக்கின்றனர்.
கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், புவனேஸ்வர், பாட்னா போன்ற விமானங்களில் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். சென்னையிலிருந்து கோவை வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானத்தையும் இயக்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X