என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலவை அருகே இருதரப்பினர் இடையே தகராறு- 4 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2020 12:14 PM GMT (Updated: 14 Sep 2020 12:14 PM GMT)
கலவை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
கலவை அருகே உள்ள நம்பிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 57). இவர் அதே பகுதியில் சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு பயிர் செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர் தினமும் நிலத்திற்கு செல்வதற்கு சேட்டுவின் நிலத்தின் வழியாக சென்று வந்து உள்ளார். அப்போது சேட்டுவிற்கும், ரவிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது சேட்டு, அவரது மகன்கள் வேலாயுதன், குமரேசன், குமரேசனின் மனைவி வளர்மதி ஆகியோர் சேர்ந்து ரவி, அவரது மனைவி இந்திரா, மகள் ராதிகா, ரவியின் அக்காள் கவுரி ஆகிய 4 பேரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரவியின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ரவி கலவை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டு, வேலாயுதன், குமரேசன், வளர்மதி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X