search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கலவை அருகே இருதரப்பினர் இடையே தகராறு- 4 பேர் கைது

    கலவை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    கலவை அருகே உள்ள நம்பிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 57). இவர் அதே பகுதியில் சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு பயிர் செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர் தினமும் நிலத்திற்கு செல்வதற்கு சேட்டுவின் நிலத்தின் வழியாக சென்று வந்து உள்ளார். அப்போது சேட்டுவிற்கும், ரவிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    அப்போது சேட்டு, அவரது மகன்கள் வேலாயுதன், குமரேசன், குமரேசனின் மனைவி வளர்மதி ஆகியோர் சேர்ந்து ரவி, அவரது மனைவி இந்திரா, மகள் ராதிகா, ரவியின் அக்காள் கவுரி ஆகிய 4 பேரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரவியின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ரவி கலவை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டு, வேலாயுதன், குமரேசன், வளர்மதி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×