என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லநாட்டில் பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது
Byமாலை மலர்14 Sep 2020 10:46 AM GMT (Updated: 14 Sep 2020 10:46 AM GMT)
வல்லநாட்டில் பெண் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வல்லநாட்டை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி அரியம்மாள் (வயது 35). மாரியப்பனின் தம்பி ராமசுப்பிரமணியன். இவர்கள் அப்பகுதியில் புதியதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் சாலையோரத்தில் கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் தம்பன் (20) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கட்டுமான பொருட்கள் வழியில் கிடந்துள்ளதால் அரியம்மாள் மற்றும் ராம சுப்பிரமணியனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே தம்பன் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அரியம்மாள் மற்றும் ராமசுப்பிரமணியனை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X