என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி
Byமாலை மலர்13 Sep 2020 11:25 AM GMT (Updated: 13 Sep 2020 11:28 AM GMT)
உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியைச் சார்ந்தவர் மின்னல் (வயது 70). இவர், உடல் நலிவுற்ற நிலையில் நேற்று காலமானார். இவரது மகன் முருகேசன் (40). இவர், கொரோனா பாதிப்பால் வாணியம்பாடியில் உள்ள கொரோனா மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாயார் இறந்த தகவலை கேள்விப்பட்டு முருகேசன் கண்ணீர் விட்டு கதறினார். கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும், அதற்காக தனக்கு டாக்டர்கள் அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி மன்றாடி உள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து, அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றனர். அங்கு, தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மரணம் அடைந்த தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அனுமதியளித்த வருவாய்த்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X