search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல்
    X
    மணல்

    ஆலங்குளம், சேர்ந்தமரம் பகுதியில் மணல் திருடிய 7 பேர் கைது

    ஆலங்குளம், சேர்ந்தமரம் பகுதியில் மணல் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் போலீசாருக்கு செட்டிகுளம் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புகார் அளித்தார். புகாரின பேரில் போலீசார் கலப்பகுலம் பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுப்பட்ட அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம், பாஸ்கர் மற்றும் கீழ குத்தபாஞ்சான் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர்களை கைது செய்தனர்.

    மேலும் சேர்ந்தமரம் போலீசார் பாண்டியாபுரம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த மாடசாமி, உடையார் சாமி, ராஜமுத்து பாண்டியன் மற்றும் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மணல் திருட பயன்படுத்திய 7 டிராக்டர் மற்றும் 7¾ யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×