search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நகராட்சி அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நகராட்சி அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். விவசாயத்துக்கான இலவச மின்சாரம், கல்வி கற்கும் உரிமை, வேலைபெறும் உரிமையை பறிக்க கூடாது. 

    புதுப்புது சட்டங்கள், அரசாணைகள் மூலம் மாநில உரிமையை பறிக்ககூடாது. ரெயில்வே, மின்சாரம், பெட்ரோலியம், காப்பீடு, நிலக்கரி, இரும்புத்தாது, விமான நிலையங்கள் என லாபம் தரும் அரசுத்துறை நிறுவனங்கைளை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×