search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - அண்ணாமலை டுவிட்

    என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன், எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தமிழக பா.ஜ.க. துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த 5-வது நாளிலேயே அவருக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

    இந்நிலையில், விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்று பெற்று பொறுப்புக்கு வந்தேன்.

    கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் பணியாற்றினேன். பாஜக ஆட்சியின் கீழ் 4 நாட்கள்தான் பணியாற்றினேன். எனது கடந்த கால சாதனைகளைப்பற்றி நான் பேசவில்லை எனினும், அது குறித்து வரும் தகவல்களைப்பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கை புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×