என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
Byமாலை மலர்28 Aug 2020 10:43 AM GMT (Updated: 28 Aug 2020 10:43 AM GMT)
ஆரணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர்.
ஆரணி:
ஆரணி நகரில் காட்டான் சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் நேற்று தனிப்படை போலீசார் ஆரணிபகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), எஸ்.வி.நகரத்தை சேர்ந்த கார்த்தி (24), ஆரணி பள்ளிக்கூடத்தெருவைச்சேர்ந்த குமார் (60), ஆரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 4 பேரை ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் கைது செய்தார். அவர்களிடமிருந்து ரூ,1,650 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று முனுசாமி தெருவில் காட்டான் சூதாட்டத்தில் ஈடுபட்ட சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (32), ஆகாரம் கிராமத்தை சேர்ந்த மதிவாணன் (25), ஆற்காடு பகுதியை சேர்ந்த சாலமன் ராஜரத்தினம் (44) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X