search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆசைவார்த்தை கூறி 17 வயது பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் போக்சோவில் கைது

    பாபநாசம் அருகே ஆசைவார்த்தை கூறி 17 வயது பெண்ணை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கீழத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 21). இவர் ரெங்கநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த 17 வயது பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு அந்த பெண்ணை காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், மகேந்திரன் ஆசைவார்த்தை கூறி எனது மகளை அழைத்து சென்று விட்டார். அவரை மீட்டு கொடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்குப்பதிவு செய்து மகேந்திரனையும், அந்த பெண்ணையும் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பெண்தஞ்சையில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இரும்புதலை பகுதியில் பதுங்கி இருந்த மகேந்திரனையம் மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.

    மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றதால் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
    Next Story
    ×