search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    குமரியில் கொரோனாவில் இருந்து 7,215 பேர் மீண்டனர்- கலெக்டர் தகவல்

    குமரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறி உள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகள் மூலம் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 215 பேர் மீண்டனர். அவர்கள் வீடு திரும்பினார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 15 ஆயிரத்து 443 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×