என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது- மத்திய அரசு
Byமாலை மலர்19 Aug 2020 8:29 AM GMT (Updated: 19 Aug 2020 8:29 AM GMT)
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-இல் (EIA-2020) இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக் கோரி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தவிட்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 19 வரை அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X