என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழுத்தை நெரித்து பெண் கொலை- உறவினர் கைது
Byமாலை மலர்15 Aug 2020 10:24 AM GMT (Updated: 15 Aug 2020 10:24 AM GMT)
மதுரையில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் அவரது உறவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதூர்:
மதுரை சிலைமான் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்லம்மாள் (வயது 65). மனோகரன் இறந்து விட்டதால் செல்லம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் டைட்டஸ் (27). இவரது மனைவி கவிதா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வதாக கவிதா கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் தனது உறவினரான செல்லம்மாளிடம் விட்டு விட்டு டைட்டஸ் தனது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த டைட்டஸ், தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி செல்லம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த டைட்டஸ் செல்லம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து செல்லமாளின் உறவினர் பெண்ணான நாகலெட்சுமி சிலைமான் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டைட்டசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சிலைமான் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்லம்மாள் (வயது 65). மனோகரன் இறந்து விட்டதால் செல்லம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் டைட்டஸ் (27). இவரது மனைவி கவிதா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வதாக கவிதா கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் தனது உறவினரான செல்லம்மாளிடம் விட்டு விட்டு டைட்டஸ் தனது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த டைட்டஸ், தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி செல்லம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த டைட்டஸ் செல்லம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து செல்லமாளின் உறவினர் பெண்ணான நாகலெட்சுமி சிலைமான் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டைட்டசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X