search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relative arrested"

    • ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் ஈடுபட்டவர்களை பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.

    இதற்காக ஆனந்தின் ஆதரவாளர்கள், கொலையாளிகளின் எதிரிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த குற்ற தடுப்பு போலீசார், சேலம் மாநகர போலீசருக்கு தகவல் அளித்தனர். இதனை விசாரித்த வீராணம் போலீசார், நேற்று கார்த்திகை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.
    • தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர்.

    கோவை:

    நெல்லையை சேர்ந்த வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது உறவினர் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து சோர்வாக இருந்தார்.இதனை பார்த்த சிறுமியின் உறவினர், தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.

    அப்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    வண்ணாரப்பேட்டையில் தூங்கி கொண்டிருந்த பூசாரி மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, பிரிவில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 32). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் பூசாரியாக இருந்தார். ஆட்டோ ஓட்டி வந்த இவர் சிவசேனா கட்சியிலும் இருந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு கார்த்திக் ராஜா காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக்கல் போடப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சத்யா பார்த்த போது கணவர் கார்த்திக் ராஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.

    இதற்கிடையே கொலையுண்ட கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தகறை படிந்த கத்தியுடன் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அப்போது வீட்டு முன்பு தூங்கிய உறவினர் கார்த்திக் ராஜாவை கத்தியால் குத்தியும் தலையில் அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கார்த்திக் ராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஏழுமலை போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கார்த்திக் ராஜாவிடம் கூறினேன்.

    அப்போது அவர் எனது மனைவி குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக நேற்று இரவும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. எனவே கார்த்திக் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நான் அங்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் ராஜாவின் மார்பிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    உடனே அருகில் கிடந்த அம்மிக்கல்லை கார்த்திக் ராஜாவின் தலையில் போட்டேன். இதில் அவர் இறந்து போனார். பின்னர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஏழுமலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் அம்மில்லை போட்டு பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×