என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 300 மணல் மூடைகள் பறிமுதல்
Byமாலை மலர்12 Aug 2020 11:19 AM GMT (Updated: 12 Aug 2020 11:19 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 300 மணல் மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மலை அடிவாரப்பகுதிகளில் ஏராளமான மணல்கள் குவிந்து உள்ளன. இவ்வாறு குவிந்துள்ள மணல்களை பல்வேறு வாகனங்கள் மூலம் பலர் அவ்வப்போது அனுமதியின்றி அள்ளி வந்து விற்பனை செய்து வந்தனர். இந்தநிலையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினேஷ்குமார் நடவடிக்கையின் பேரில் மணல் திருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குறைந்திருந்தது. ஆனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மூலம் மணல் கடத்தி ஒரு இடத்தில் ஏராளமான மணல் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் பால்துரை ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் அய்யம்பட்டி தெருவிற்கு சென்றனர். அப்போது அங்கு 300 மணல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மணல் மூடைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தாசில்தார் சரவணன் கூறியதாவது:- இரு சக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தி பிடிபடுபவர்கள் மீது மாவட்ட கலெக்டர் மற்றும் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு பரிந்துரை செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X