என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய 3 டிராக்டர், மினி லாரி பறிமுதல்
Byமாலை மலர்7 Aug 2020 2:03 PM GMT (Updated: 7 Aug 2020 2:03 PM GMT)
சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய 3 டிராக்டர் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் சூரக்கோட்டை கோவில் குட்டை உள்ளது. இங்கிருந்து இரவு நேரங்களில் சட்டு மண் அனுமதியின்றி கடத்தி செல்வதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 டிராக்டர் மற்றும் ஒரு மினி லாரியில் சுமார் 15 டன் சட்டு மண்ணை ஏற்றி கொண்டு வாகனங்கள் கிளம்பியது.
அந்த சமயம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 4 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு தாசில்தார் ஜானகி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனங்களில் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததன் அடிப்படையில் மண் அள்ளப்பட்டதாக கூறப்படுவதால் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X