search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    கொரோனா வைரஸ் பாதிப்பு- கோடம்பாக்கத்தை முந்திய அம்பத்தூர்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

    இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:

    கோடம்பாக்கம் - 1,349
    அண்ணாநகர் - 1,198
    அடையாறு - 1,012
    திரு.வி.க.நகர் - 952
    வளசரவாக்கம் -900
    தேனாம்பேட்டை - 804
    ராயபும் -796
    தண்டையார்பேட்டை - 645
    மாதவரம் - 568
    ஆலந்தூர் - 520
    பெருங்குடி - 484
    சோழிங்கநல்லூர் -482
    திருவொற்றியூர் - 423
    மணலி - 89
    அம்பத்தூர் - 1,401 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×