search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரம்
    X
    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு

    சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. என்றாலும் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

    என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×