search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்கன் (கோப்புப்படம்)
    X
    டோக்கன் (கோப்புப்படம்)

    ஆகஸ்ட் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்

    ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறுவதற்கு வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
    சென்னை:

    கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத்த்திற்கான ரேசன் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகிக்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மற்றும் 3, 4  தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 7-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படும் எனவும் 7ந் தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் எனவும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×