என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் - கலெக்டரிடம் ஜாக்டோ-ஜியோ மனு
Byமாலை மலர்30 July 2020 11:03 AM GMT (Updated: 30 July 2020 11:03 AM GMT)
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடைசிவரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர்.
அதனை தொடர்ந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலை அரசுடன் சேர்ந்து தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது அரசுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X