search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பழ வியாபாரி உயிரிழப்பு

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பூமாரி(வயது 38). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மத்திய பஸ்நிலையம் அருகே பழக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு லாரியில் வரும் பழங்கள் மன்னார்புரம் அருகே இறக்கி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை மன்னார்புரத்தில் இறக்கி வைத்த பழப் பெட்டிகளை அடுக்கி வைப்பதற்காக பூமாரி மோட்டார் சைக்கிளில் சென்றார். மன்னார்புரத்தில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி அணுகுசாலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறியது.

    இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூமாரி இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×