search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆத்தூர் அருகே விவசாயி தற்கொலை

    ஆத்தூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே சார்வாய்புதூர் கிராமம் வடக்குகாடு சூரக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அரவிந்த் (வயது 29). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் சாமி கோவில் அடிவாரத்தில் வளையமாதேவி பிரிவு ரோட்டில் இறந்து கிடந்தார். ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த அரவிந்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×