search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் மழை

    குமரி மாவட்டத்தில் மலையோர மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்று மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பூதப்பாண்டி-1.4, சிற்றார்- 1, களியல்- 1.3, கன்னிமார்- 1, குழித்துறை- 2, பாலமோர்- 6.2, மாம்பழத்துறையாறு- 6, குருந்தன்கோடு- 7, முகிலன்விளை- 3, அடையாமடை- 2 முக்கடல்- 2.4 என பதிவாகி இருந்தது.

    அணைப் பகுதிகளிலும் சாரல் மழை நீடிப்பதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 30.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 528 கன அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 47 அடியாக உள்ளது. அணைக்கு 112 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    Next Story
    ×