search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

    தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலுகா, வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.

    மருத்துவமனை கட்டடங்கள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் நிதி பயன்படுத்தப்படும். உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பை நிறுவிடவும், ஆக்சிஜன் தொட்டிகளை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவநிலை ஆக்சிஜன் 835 கியூபிக் மீட்டர் வாயுநிலை ஆக்சிஜனாக மாறக்கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×