search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றையதினமே விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது? என்ற தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

    அதன்படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை(சனிக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

    தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×