என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்24 July 2020 3:28 AM GMT (Updated: 24 July 2020 3:28 AM GMT)
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றையதினமே விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது? என்ற தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
அதன்படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை(சனிக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றையதினமே விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது? என்ற தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
அதன்படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை(சனிக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X