என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 32 பேர் ‘பிளாஸ்மா’ தானம்
Byமாலை மலர்23 July 2020 6:57 AM GMT (Updated: 23 July 2020 6:57 AM GMT)
கொரோனாவில் இருந்து குணமடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் 32 பேரின் ‘பிளாஸ்மா’ தானமாக பெறப்பட்டு உள்ளது.
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்படும் ரெயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு பெரம்பூரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற்றவர்களில் 484 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் 32 பேரின் ‘பிளாஸ்மா’ தானமாக பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது குணமடையும் ரெயில்வே ஊழியர்களிடம் இருந்து ‘பிளாஸ்மா’ பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் பாதிக்கப்படும் ரெயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு பெரம்பூரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற்றவர்களில் 484 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் 32 பேரின் ‘பிளாஸ்மா’ தானமாக பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது குணமடையும் ரெயில்வே ஊழியர்களிடம் இருந்து ‘பிளாஸ்மா’ பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X