search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திட்டுவிளை நிதிநிறுவன பெண் ஊழியர் உள்பட 4 பேருக்கு தொற்று

    திட்டுவிளை நிதிநிறுவன பெண் ஊழியர் உள்பட 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பூதப்பாண்டி;

    பூதப்பாண்டி அடுத்த திட்டுவிளை குருசடி தெருவை சேர்ந்தவர் 39 வயது பெண். இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி கொடுத்தார்.

    இந்தநிலையில் நேற்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், சுகாதார ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் திட்டுவிளை குருசடி தெருவில் வீட்டில் இருந்த நிதிநிறுவன பெண் ஊழியரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் சேர்த்தனர். மேலும், தூய்மை பணியாளர்கள் அவரது வீடு உள்ள பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தடிக்காரன்கோணம் அருகே வெள்ளாம்பி மலைவாழ் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரி மாணவருக்கு தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவரின் சகோதரி, அவருடைய கணவர் மற்றும் 5 வயது குழந்தை ஆகிய 3 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். வெள்ளாம்பி பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    Next Story
    ×