என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்14 July 2020 2:12 PM GMT (Updated: 14 July 2020 2:12 PM GMT)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,467, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேர் உட்பட 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ல் இருந்து 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 89,834 ஆண்கள், 57,467 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 47,912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 11வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,078 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 78,573லிருந்து 79,662 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567ல் இருந்து 97,310 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 67 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 17 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,467, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேர் உட்பட 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ல் இருந்து 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 89,834 ஆண்கள், 57,467 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 47,912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 11வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,078 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 78,573லிருந்து 79,662 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567ல் இருந்து 97,310 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 67 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 17 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X