search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்கு சீல்
    X
    கடைக்கு சீல்

    சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீன் கடைக்கு சீல்- மாநகராட்சி தனி அதிகாரி நடவடிக்கை

    சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த மீன் கடைக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட மாநகராட்சி தனி அதிகாரி, அதனை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 68-வது வார்டு ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள தனியார் மீன் கடையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த மீன் கடைக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட மாநகராட்சி தனி அதிகாரி, அதனை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மீன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    Next Story
    ×