search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    4 போலீசாருக்கு கொரோனா தொற்று- போலீஸ் நிலையம் மூடப்பட்டது

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர், எழுத்தர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது.

    திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை மற்றும் சுகாதாரத்துறையினர் போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு அந்த போலீஸ் நிலையத்திற்குள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். 
    Next Story
    ×