search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ முகாம்
    X
    மருத்துவ முகாம்

    ஆடுதுறையில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம்

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை வீரசோழன் திருமண மண்டபத்தில் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    திருவிடைமருதூர்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை வீரசோழன் திருமண மண்டபத்தில் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஆடுதுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஆளவந்தார் முன்னிலை வகித்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். முகாமில் ஆடுதுறை மற்றும் திருவிடைமருதூர் பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும், கர்ப்பிணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    Next Story
    ×