search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி, தொலைதொடர்பு முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்மாசி, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முரளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும்.

    விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு குறித்த நேரத்தில் செலுத்த வேண்டும். தொலைதொடர்பு பணிகளை அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தம் விடும் முறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.
    Next Story
    ×