search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

    சங்கராபுரத்தில் மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பு, திருக்கோவிலூர் மெயின்ரோடு, பூட்டை சாலை ஆகிய பகுதிகளில் சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலர் முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 18 பேருக்கு அதிகாரிகள் தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் கடைகளில் வியாபாரம் செய்தது மற்றும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாத 15 கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 
    Next Story
    ×