என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.81¼ லட்சம் அபராதம்
Byமாலை மலர்10 July 2020 9:16 AM GMT (Updated: 10 July 2020 9:16 AM GMT)
சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 105 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நபர் 2-வது தடவை வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது தடவை வந்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.76 லட்சத்து 79 ஆயிரத்து 445-ம், நகராட்சி பகுதிகளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 900-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 660-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.13 ஆயிரத்து 100-ம் என மொத்தம் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 105 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் மற்றும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 நபர்களும் என மொத்தம் 66 பேர் பூர்ண குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நபர் 2-வது தடவை வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது தடவை வந்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.76 லட்சத்து 79 ஆயிரத்து 445-ம், நகராட்சி பகுதிகளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 900-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 660-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.13 ஆயிரத்து 100-ம் என மொத்தம் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 105 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் மற்றும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 நபர்களும் என மொத்தம் 66 பேர் பூர்ண குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X